The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Wednesday, 8 February 2012

தினமணி தலையங்கம்: ஏன் தயங்குகிறார்கள் ?

                           
             இந்திய அஞ்சல் துறையை புதுமைப்படுத்தும் புதிய கொள்கை நிகழாண்டில் அமலுக்கு வரும் என்றும், இதன் மூலம் அஞ்சல் நிலையங்கள் வங்கிகளாக மாறும், கூரியர் நிறுவனங்கள் அஞ்சல் துறையில் பதிவுசெய்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார். இவர் பொறுப்பேற்ற நேரத்திலும்கூட இதையேதான் சொன்னார். இப்போதும் சொல்கிறார்.

அஞ்சல் நிலையங்களின் மிக முக்கியப் பணியான கடிதங்கள், பார்சல்கள் பட்டுவாடா செய்வது கூரியர் நிறுவனங்களின் வருகையால் பாதிக்கும் மேலாகக் குறைந்து மிகப்பெரும் வருவாய் இழப்பை அஞ்சல்துறை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பல கிளைகள் மூடப்பட்டு வருகின்றன. ஆனால் இப்போதுதான், கூரியர் நிறுவனங்கள் பதிவுசெய்த நிறுவனமாக உரிமம் பெற்றால் மட்டுமே செயல்பட முடியும் என்கிற கட்டாயத்தை உருவாக்குவது பற்றி சிந்திக்கிறார்கள்.

கூரியர் நிறுவனங்கள் வருகையால் மிகப்பெரும் வருவாய் இழப்பைச் சந்திக்க நேர்ந்ததை உணர்ந்துகொண்ட அரசு, 2002-ம் ஆண்டிலேயே இந்திய அஞ்சல் அலுவலகம் (திருத்த) வரைவு மசோதாவை தயாரித்து மக்கள் கருத்துக்காக வெளியிட்டது. இதில் முக்கியம் தரப்பட்ட இரண்டு விஷயங்கள்: ஒன்று- கடிதம் என்பதற்கு வரையறை என்ன? இரண்டு- அஞ்சல் செய்யப்படும் பொருளைச் சேகரித்தல், கொண்டு செல்லுதல், விநியோகித்தல் ஆகிய சேவைகளைச் செய்வோர் பதிவு செய்த நிறுவனங்களாக மட்டுமே இருக்க வேண்டும்.

இந்த வரைவு மசோதா வெளியானபோது கூரியர் நிறுவனங்கள் 2002-ம் ஆண்டிலேயே எதிர்ப்பு தெரிவித்தன. அஞ்சல் செய்யப்படும் பொருள் எடை 500 கிராமுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே கூரியர் நிறுவனங்கள் அதைக் கொண்டு செல்ல அனுமதிக்கலாம் என்கின்ற நிபந்தனை இந்த மசோதாவில் இருக்கிறது. இது கூரியர் நிறுவனங்களுக்கு எதிரானது என்று குரல் கொடுத்தார்கள். லைசன்ஸ் ராஜ் தலையெடுக்கிறது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதன் பிறகு மத்திய அரசு, இந்தச் சட்டத் திருத்தம் பற்றிப் பேசவே இல்லை. இப்போது ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இதே விவரத்தை மத்திய அமைச்சர் கபில் சிபல் கையில் எடுத்திருக்கிறார்.

அஞ்சல் அலுவலக (திருத்த) சட்டம் என்பது வெறுமனே அஞ்சல் துறையின் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கான சட்டம் என்று சொல்லிவிட முடியாது. இதில் நுகர்வோர் நலனுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது என்பதுதான் இதன் சிறப்பு.

மீண்டும் 2006ம் ஆண்டு, இந்திய அஞ்சல் அலுவலக(திருத்த) சட்டத்திலும் இதே விஷயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த வரைவு மசோதாவில் கடிதம் என்பது என்ன என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. எடை குறித்த நிபந்தனைகள் மாறுதலுக்கு உட்பட்டாலும், கடிதம் என்றால் என்ன என்ற வரையறைதான் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்தக் கடிதங்களை, அஞ்சல் பொருள்களை சேகரிக்க, விநியோகிக்க, கொண்டு செல்ல விரும்பும் நிறுவனங்கள் அஞ்சல்துறையிடம் பதிவு செய்தால் மட்டுமே இந்த சேவைத் தொழிலில் ஈடுபட முடியும். இந்த நிறுவனங்களின் சேவைக் குறைபாடு தொடர்பாக புகார் வந்தால், அல்லது அஞ்சல்துறை கண்டறிய நேர்ந்தால் இந்த நிறுவனத்தின் பதிவை/அங்கீகாரத்தை ரத்து செய்துவிட முடியும்.

மேலும், சேவையில் குறைபாடு இருந்தால் அஞ்சல் துறையின் நடுவர் மன்றத்தில் நுகர்வோர் முறையிட முடியும். ஒரு கூரியர் நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் ரூ.25 லட்சத்துக்கும் அதிகம் என்றால், அந்த நிறுவனத்தின் சேவையில் குறைபாடு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கும் வகையில், ஆண்டு விற்றுமுதலில் 10 விழுக்காட்டினை அஞ்சல்துறையிடம் முன்வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்றெல்லாம் சில நல்ல நிபந்தனைகள் அந்த வரைவு மசோதாவில் இருந்தன.

அதனை அப்போதே அமலுக்குக் கொண்டு வந்திருந்தால், இந்நேரம் அஞ்சல் துறைக்கு மிகப்பெரிய அதிகாரமும், இவர்களைக் கட்டுப்படுத்தும் திறனும் ஏற்பட்டிருப்பதோடு, இவர்களுடன் போட்டியிட சமவாய்ப்பும் உருவாகியிருக்கும். ஆனால் மத்திய அரசு அதைச் செய்யத் தவறிவிட்டது. இப்போது இந்தியாவில் மிகப்பெரிய தொடர் சங்கிலி அலுவலக வசதிகள் கொண்ட கூரியர் நிறுவனங்கள் சுமார் 50 உள்ளன. இந்த நிறுவனங்களுடன் சேர்ந்தும், தனித்தும் செயல்படும் நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் 2800 உள்ளன. இந்த ஆண்டும்கூட இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வராவிட்டால், அஞ்சல்துறையை மீட்பது மிகவும் கடினம்.

இந்த அஞ்சல் அலுவலக திருத்த வரைவு மசோதாவில், இன்றைய தகவல் தொழில் நுட்பத்தையும்,கணினி பயன்பாட்டையும் கருத்தில்கொண்டே டிரான்ஸ்மிஷன் அல்லது டெலிவரி என்ற வார்த்தைகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு முழுமையாக, யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல் நிறைவேற்றி அமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இந்தியாவில் 1.55 லட்சம் அஞ்சல் கிளைகள் உள்ளன. அதாவது, நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்து வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையைவிட இது அதிகம். ஆனால் இன்னும், இந்திய அஞ்சல் நிலையங்களை, வங்கியாக மாற்றுவதற்கு நிதியமைச்சரிடம் கடிதம் எழுதியிருக்கிறோம், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டிருக்கிறோம் என்று ஏதோ தனியார் நிறுவனம் போல இந்திய அஞ்சல் துறை ஏன் பரிதாபக் குரல் எழுப்புகிறது என்று புரியவில்லை.

இந்திய அஞ்சல் துறைபோன்று உள்கட்டமைப்பு உள்ள அரசுத் துறை வேறு எந்த நாட்டிலும் இந்த நூற்றாண்டில் இருக்கிறதா என்பது சந்தேகம். வெறும் 50 காசுகளில் தொலைபேசியில் பேசலாம். ஆனால் எழுத்துப்பூர்வமான பதிவு 50 காசுகளில் முடியும் என்றால் ஒரு அஞ்சல் அட்டை போதும். இவ்வளவு அற்புதமான ஒரு துறையைக் காப்பாற்றப் போகிறார்களா? கைவிடப் போகிறார்களா?

நன்றி : தினமணி 

Friday, 3 February 2012

LGO Examination Result 2012 ( Tamilnadu Circle )


LGO  தேர்வு முடிவுகள் வெளியிட பட்டுள்ளன.
திரு  விவேகாநந்தன் 
திருமிகு   தெய்வஜோதி வளர்மதி
திரு  மாரியப்பன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
 அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 


Surplus Qualified List ம் வெளியிடப்பட்டுள்ளது 

Wednesday, 1 February 2012

7 % DA உயர்வு

All-India Consumer Price Index Numbers for Industrial Workers on Base 2001=100 for the Month of December 2011.

All India Consumer Price Index Number for Industrial Workers (CPI-IW) on base 2001=100 for the month of December, 2011 decreased by 2 points and stood at 197 (one hundred & ninety seven).
During December, 2011, the index recorded maximum decrease of 8 points each in Ghaziabad and Jamshedpur centres, 7 points each in Mysore, Bokaro and Ranchi Hatia centres, 6 points in 3 centres, 5 points in 3 centres, 4 points in 6 centres, 3 points in 11 centres, 2 points in 18 centres and 1 point in 17 centres. The index increased by 6 points in Coonoor centre, 4 points in Chennai centre, 3 points in Mercara centre, 2 points in 3 centres and 1 point in 2 centres, while in the remaining 7 centres the index remained stationary.
The maximum decrease of 8 points in Ghaziabad and Jamshedpur centres is mainly on account of decrease in the prices of Onion, Vegetable & Fruit items, Primary and Middle School Fee and Books, etc. The decrease of 7 points in Mysore, Bokaro and Ranchi Hatia centres is mainly due to decrease in the prices of Rice Wheat, Onion, Vegetable & Fruit items, Primary and Middle School Fee and Books, Petrol, etc. The increase of 6 points in Coonoor centre is mainly due to increase in the prices of Rice, Maida, Suji, Dairy Milk, Milk (Cow), Tamarind, Tea (Readymade), Sugar, Sweater, Medicine (Allopathic), Medicine (Homeopathic), Bus Fare, Barber Charges, etc. The increase of 4 points in Chennai centre is due to increase in the prices of Dairy Milk, Tea (Readymade), Cigarette, E.S.I. Contribution, Bus Fare, Flower/Flower Garlands, etc.
The indices in respect of the six major centres are as follows :
1. Ahmedabad – 190
2. Bangalore – 199
3. Chennai – 184
4. Delhi – 182
5. Kolkata – 185
6. Mumbai – 199
The point to point rate of inflation based on CPI-IW(General) for the month of December, 2011 is 6.49% as compared to 9.34% in November, 2011. Inflation based on Food Index dipped to the level of 1.97% in December, 2011 as compared to 7.61% in November, 2011.
The CPI-IW for January, 2012 will be released on the last working day of the next month, i.e. 29th February, 2012.
- PIB

 DA Calculation Sheet
Jun-1118958.59
Jul-1119359.67
Aug-1119460.82
Sep-1119762.12
Oct-1119863.34
Nov-1119964.56
Dec-1119765.43
 

Tuesday, 31 January 2012

Saturday, 28 January 2012

29.01.2012 அன்று மணநாள் காணும்
NFPE P4 மாநில தலைவர் திரு G. கிருஷ்ணன் அவர்கள்
குமாரர் செல்வன்  முத்தானந்தகுமார் Weds மணமகள் செல்வி நம்பிராஜம்

NFPE P3 கோட்ட செயலாளர் திரு K. செல்ல கண்ணன் அவர்கள் குமாரர்
செல்வன்  மகேஷ் பாபு   Weds   மணமகள் செல்வி ராமலக்ஷ்மி @ கவிதா
ஆகியோர்  வாழ்வில்  பதினாறு பேறும் பெற்று வளமுடன் வாழ இறையருள் வேண்டுகின்றோம்

Approval for funding Phase-Ill of the UIDAI

The Cabinet Committee on Unique Identification Authority of India related issues (CC-UIDAI) today approved commencement of Phase-Ill of the UID scheme at an estimated cost of Rs.8,814.75 crore which subsumes the earlier approval of Rs.3,023.01 crore, and comprises costs for issue of 20 crore Aadhaar numbers through Multiple Registrars upto March 2012, printing and delivery of 20 crore Aadhaar letters, technology and other support infrastructure cost for creation, storage and maintenance of data and services for leveraging the uses of Aadhaar for the entire estimated resident population upto March 2017.

Out of amount of Rs.8814.75 crore that has been approved for incurring expenditure upto March 2017, Rs.2412.67 crore would be towards recurring expenditure including IT operational cost and recurring establishment cost and Rs.6402.08 crore would be towards non-recurring project related expenditure.

Friday, 27 January 2012

Rotational Transfer 2012

Request for the RT 2012 is called for.
Last date for request : 13.02.2012
Modification if any, Intimate before : 03.02.2012

Divisional Secretary P3
Tirunelveli Division.

 

Monday, 23 January 2012

LGO Results will be declared today evening by the Circles.
Qualified List has been sent to Circles today by the Directorate.
Total no of Vacancies in P.A1688
Total no of L.G.O qualified as PA1220
Total no of Vacancies in SA398
Total no of L.G.O qualified as SA51

Names of the qualified officials will be published in our blog shortly.

Courtesy : www.fnpo.org

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms