The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday 17 December 2011

மாநில செயலாளர் சுற்றறிக்கை Dated 12.12.2011

மாநில செயலாளர் Mr G.P.M சுற்றறிக்கைலிருந்து சில வரிகள் உங்களுக்காக : 

மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் 
                         மாநாட்டின் துவக்க நாள் அன்று மாலை 3 மணிக்கு ஊர்வலமும் பொது அரங்கு நிகழ்ச்சியும்,  மாநாட்டின் இரண்டாம் நாள் January 5th 2012 அன்று "Government Postal Service should override private players - Responsibility rests with the staff " என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது.  

கோரிக்கைகள்                        ஏற்கனவே நிரந்தரம் செய்யப்பட்ட 240 RRR  ஊழியர்கள் தவிர்த்து மிதமுள்ள சுமார் 90 க்கு மேற்பட்ட ஊழியர்கள் தங்களையும் நிரந்தரம் செய்யவேண்டும் எனக் கோரி DG அவர்களுக்கு மனு செய்தனர் . அம்மனுக்களை DG நிராகரித்திருந்தார் . அதன் பின்னணியில்  Chief  PMG அவர்கள் தமிழகத்தில் அனைத்து ஊழியர்களையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கிட உத்தரவிட செயலை அனைத்து FNPO சங்கங்களும் எதிர்த்தன. பிறகு இரு தினம் 13 மற்றும் 14.09.2011 ஆகிய நாள்கள உண்ணாவிரதமும் நடத்தப்பட்டன .

  • CCR PMG திரு ராமானுஜம் அவர்கள் மனிதாபி மானத்தொடு மீண்டும் பணியமர்த்த உதவினார்.  அவர்களுக்கு FNPO வின் மனப்பூர்வமான நன்றிகள்.

குறிப்பாக தென் மண்டலத்தில்   திருநெல்வேலி உட்பட பல்வேறு கோட்டங்கள் தொடர்ந்து மறுத்து வருகிறது.FNPO தொடர்ந்து மாநில  மற்றும் மண்டல அளவில் வலியுறுத்தி வருகிறது.
  • நமது மாநில சங்கத்தின் தொடர் வற்புறுத்தலுக்கு பின்பு 40 LSG உத்திரவுகள் விரைவில் வெளிவர இருக்கிறது
(  குறிப்பு  : 2 தினங்களுக்கு முன்பு ( 13.12.2011 ) வெளிவந்துவிட்டது )
HSG II Regular மற்றும் LSG Accountant 30 பதவிகளுக்கு ஓரிரு வாரத்தில் பதவி உயர்வு உத்திரவு வெளிடப்படும் என தெரிகிறது.
நன்றி

Friday 16 December 2011

மார்கழி மகிமை


 ஸ்ரீ  ஆண்டாள்

மாதங்களில் நான் மார்கழி யாக  இருக்கிறேன் என்பது கண்ணபிரானின் அருள்வாக்கு 
 ஸ்ரீ  ஆண்டாள்
                  
                   நம் முன்னோர்கள் முழு ஆண்டையும் ஆறு பருவங்களாக பிரித்தனர்  அவை கார்          கூதிர்       முன்பனி          பின் பனி இளவேனில்         முதுவேனில்   என வகுத்தனர் 

அவற்றில்  கார்த்திகை - மார்கழி கூதிர் பருவம் ஆகும்  கூதிர் என்பது குளிர் அதிகமான காலமாகும் இக்காலத்தில் உடல் வெப்பம் தனிய விடியற் களத்தில் குளிப்பது உடல் நலத்திற்கு பயன் அளிக்கும்
உடல் குளிர்ச்சியுடன் உள்ளமும் குளிர இறைவழிபாடு மிக்க அவசியம் .
            
                 வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு. தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை.
                அப்படி பட்ட பெருமைக்குரிய திருப்பாவை நோன்பு இன்று (December 17) முதல் கடைபிடிக்க படுகிறது. அந்நோன்பை நாமும் கடைபிடித்து பெருமாளின் பேரன்புக்கு பதிரமவோமாக.

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும் 


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms