The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday 12 July 2014

Latest NEWS



1.  Opening of holiday home at Tirupati for CG employees

2.  Grant of increased rate of Washing Allowance to the Canteen Employees
3.  Restricted Holiday(R.H.) on the occasion of the Maha Shivratri  to be observed on 17th February, 2015


மாநில தேர்தல் சிறப்பு மாநாடு

தமிழ் மாநில பொறுப்பாளர்கள் அகில இந்திய பொறுப்பாளர்களுடன்
அன்பு தோழர்களே
        வணக்கம் நமது தமிழ் மாநில தேர்தல் சிறப்பு மாநாடு கோவில்பட்டி நகர் L.G.செல்வமஹாலில்  10.07.2014 அன்று வியாழன் காலையில்  சரியாக 1௦3௦ மணிக்கு கிருஷ்ணகிரி கோட்டசெயலாளர் இடைக்கால குழுவின் உறுப்பினர் திரு.K.மோகன்ராவ், அவர்கள்  தலைமையில் மிக கோலாகலமாக தொடங்கியது
         மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக இறைவணக்கம் பாடப்பட்டது.
அதனை தொடர்ந்து இடைக்கால குழுவின் தலைவர் திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் 
          மாநாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சார்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து  
அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.D.கிஷன் ராவ் அவர்கள்  தற்போதைய நிலையில் இலாகா சந்திக்கும் பிரச்சனைகள் 7 வது ஊதியகுழுவில் நமது கோரிக்கைகள் அதனை பற்றிய நிலை போன்றவற்றை விளக்கினார். அதனை தொடர்ந்து கர்நாடக மாநில செயலரும் நமது அகில இந்திய உதவி செயலருமான திரு B . ஷிவ்குமார் அவர்கள்.
முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு. P.S. பாபு  அவர்கள் முன்னாள் ACP Tamilnadu Circle திரு.N.R. கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இம்மாநாட்டில் தமிழ் மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.

      இடைக்கால குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோவில்பட்டி கோட்ட நிர்வாகிகளுடன் இணைந்து மாநாடு ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தனர்.
From Left to Right, Shri.Thirugnana Sampantham, Shri.K.Mohan Rao, Shri.B.Shivkumar, Shri.P.S.Babu and Shri Kishan Rao

நெல்லை கோட்டம் மீண்டும் SPOs ஆகா தரம் மாற்றப்படுகிறது

          கடந்த சில தினங்களுக்கு முன்னாள்  SSPOs ஆக தரம் உயர்த்தபட்டது தற்போது மீண்டும் SPOs ஆகா தரம் மாற்றப்படுகிறது

Friday 11 July 2014

எதிர்பார்ப்பு அதிகம் - ஆனால் ஏமாற்றம் இல்லை.

                      பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.  2014-15 நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட்டில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிறிய மற்றும் மிகச்சிறிய வரிவிதிப்பிற்கு உரியவர்களுக்கு குறிப்பாக மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது.
வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு சாதகமானதே.
சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார்.
உற்பத்தி வரிவிதிப்பின் மூலம், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. வரிவிலக்கு மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் சிஆர்டி தொலைக்காட்சிகள் விலை குறைகிறது. அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
  • வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வை இனியும் அரசு பொறுத்துக் கொள்ளாது. 
  • மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர்ந்து இருக்கிறது. 
  • கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி 5%-க்கும் குறைவாக இருந்தது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. 
  • இராக் உள்நாட்டு சர்ச்சையும், பருவமழை எதிர்பார்த்த அளவைவிட குறைவாக பெய்துள்ளதும் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். 
  • இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த மிக முக்கியமான, துணிச்சலான முடிவுகள் மேற்கொள்ளப்படும் 
  • கவர்ச்சித் திட்டங்கள், அநாவசிய செலவினங்களை அரசு தவிர்க்க வேண்டும். அரசு செலவினங்களை நிர்வகிக்க தனியாக ஒரு ஆணையம் அமைக்கப்படும்
  • பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்.
  • நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.1% என்ற சவாலான இலக்கை எட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • மானியங்கள், எரிபொருள் பொருளாதார கொள்கைகள், உரங்களுக்கான  மானியம் மறு சீரமைக்கப்படும். 
  • வரி விவகாரங்களை கையாள உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.
  • அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7% முதல் 8% வரை அதிகரிப்பதே இலக்கு
  • வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் 
  • உற்பத்தித் துறையிலும், கட்டுமானத் துறையிலும் வளர்ச்சியை துரிதப்படுத்துவது அவசியம். 
  • வங்கிகளுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்படும்.
  • 100 நவீன நகரங்களை உருவாக்க ரூ.7060 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • வீடுகளுக்கு 24 மணி நேரம் மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கிசான் விகாஸ் பத்திர திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். 
  • 9 நகரங்களில் இ- விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • நீர்பாசனத்தை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கப்படும் இதற்காக 'பிரதான் மந்திரி கிருஷி சிச்சாயின் யோஜனா' செயல்படுத்தப்படும்.
  • சுகாதார மேம்பாட்டிற்கு 'பாரத் ஸ்வச் யோஜனா' செயல்படுத்தப்படும்
  • ரூ.200 கோடி செலவில் குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்படும்.
  • தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ச்சிக்காக ரூ.50,548 கோடி ஒதுக்கப்படுகிறது. 
  • அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை கொள்ள வேண்டும். 
  • முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு நிலையான வரி விதிப்பு முறையை கொண்டு வரப்படும்.
  • அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும் பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு       49 சதவிகிதமாக அதிகரிக்கப்படும். 
  • வரிச் சட்டங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள தொழில்துறையுடன் ஆலோசிக்க சிறப்பு குழு அமைக்கப்படும்
  • பிரெயில் எழுத்துக்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகள் அமலுக்கு வரும், இதற்காக 15 பிரெயில் அச்சகங்கள் அமைக்கப்படும்
  • பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டம் (Beti Bachao, Beti Padhao yojana) ரூ.100 கோடி செலவில் அமலுக்கு வருகிறது. 
  • ஆண் - பெண் பாலின பாகுபாடை தவிர்க்க பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். 
  • பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு தீர்வு காண டெல்லியில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்படும். பெருநகரங்களில் பெண்கள் பாதுகாக்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 
  • ரூ.500 கோடி செலவில் மேலும் 5 IIT க்களும், 5 IIM களும் நிறுவப்படும். ஜம்மு, சத்தீஸ்கர், ஆந்திரம், கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் IIT கள் அமைக்கப்படும். பஞ்சாப், இமாச்சல பிரதேசம், பிஹார், ஒடிசா, ராஜஸ்தானில் IIM கள் அமைக்கப்படும்.
  • தெலுங்கானாவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும். 
  • ஆந்திரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வேளாண் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்
  • விவசாய சேமிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 5000 கோடி ஒதுக்கீடு
  • கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த, நவீனமயமாக்கப்பட்ட 15 மாதிரி கிராம சுகாதார மையங்கள் நிறுவப்படும். 
  • கிராமங்களில் மின்சார வசதியை மேம்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
  • ரூ.100 கோடி செலவில் மதரஸாக்கள் நவீனப்படுத்தப்படும்.
  • காக்கிநாடா துறைமுகத்தில், வன்பொருள் ஏற்றுமதிகளை கையாளும் மையம் உருவாக்கப்படும். 
  • நிலமில்லாத 5 லட்சம் விவசாயிகளுக்கு 'நபார்ட்' வங்கி மூலம் நிதியுதவி வழங்க பரிந்துரை.
  • விவசாயத்தில் புதிய யுக்திகளை அறிமுகப்படுத்த அசாம், ஜார்கண்ட் மாநிலங்களில் சிறப்பு மையம் அமைக்கப்படும்
  • கிராமப்புற வீட்டு வசதிக்கு ரூ.8000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிராமப்புற குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2019-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும் 
  • படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.ஏற்கெனவே புதிதாக அமைக்கப்பட்ட 6 AIMS மருத்துவமனைகளும் செயல்படத் துவங்கியுள்ளன. மேலும் 4 AIMS மருத்துவமனைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்படும் 
  • சமுதாய வானொலி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
  • வேளாண் துறையில், 4% வளர்ச்சியை எட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் 
  • நடப்பு நிதியாண்டில் விவசாய கடனாக ரூ.8 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
  • விவசாயிகளுக்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். 
  • விவசாய கடன்களை சரியாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3% ஊக்கத் தொகை வழங்கப்படும்
  • புதிய யூரியா கொள்கை கொண்டு வரப்படும்
  • தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் ரூ.500 கோடி செலவில் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும் 
  • இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்படும்
  • புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்த நிதியாண்டில் அமைக்கப்படும். 
  • கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு ரூ.14,389 கோடி பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும்
  • மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டம் மறு சீரமைக்கப்படும்
  • ரூ.100 கோடி செலவில் போர் நினைவிடம் கட்டப்படும்
  • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
  • 6 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் 
  • காஞ்சிபுரம், மதுரா உள்ளிட்ட இடங்களில் தேசிய பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு
  • தற்போது நாடு முழுவதும் 15,000 கிமீ தூரத்திற்கு எரிவாயு குழாய்கள் இருக்கின்றன. பொதுத்துறை - தனியார் துறை பங்களிப்பில் இது இருமடங்காக அதிகரிக்கப்படும்
  • மணிப்பூரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவப்படும். 
  • தேசிய விளைடாட்டு அகாடமி அமைக்கப்படும் வரவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
  • கங்கை நதியை தூய்மைப்படுத்தி, மேம்படுத்த ரூ.2037 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமாமி கங்கா ("Namami Ganga") என இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது 
  • கங்கை நதியை சுத்தப்படுத்த வெளிநாடு வாழ் இந்தியர் நிதி திட்டம்
  • இடம்பெயர்ந்த காஷ்மீரிக்கள் மறுவாழ்விற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
  • இமாலய மலை தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள உத்தராகண்டில் தேசிய அகாடமி நிறுவப்படும்
  • வடகிழக்கு மாநிலங்களில் ரயில் சேவையை மேம்படுத்த ரூ.1000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது
  • வடகிழக்கு மாநிலங்களுக்காக பிரத்யேகமாக 'அருண் பிரபா' என்ற 24 மணி நேர தொலைக்காட்சி அலைவரிசை துவங்கப்படும்
  • வருவாய் பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 2.1% ஆக இருக்கும்
  • தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
  • மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
  • சேமிப்புக்கான வரி விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக உயர்வு
  • வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு  
  • 80(சி) பிரிவின் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
  • வரிவிதிப்பின் மூலம் ரூ.9.77 லட்சம் கோடி வருவாய் ஈட்டலாம் என அரசு எதிர்பார்க்கப்படுகிறது
  • ரூ. 25 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். 
  • மூன்று ஆண்டுகளுக்கு 15% வரிச்சலுகை வழங்கப்படும் 
  • நேரடி வரி, மறைமுக வரி வசூல் இலக்கு இடைக்கால பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டதே பின்பற்றப்படும்
  • நாடு முழுவதும் புதிதாக 60 வருமான வரிச் சேவை மையங்கள் அமைக்கப்படும்
  • கல்வி வரியில் மாற்றமில்லை. வருமான வரியில் கல்விக்கான வரி 3% ஆகவே நீடிக்கும் என அறிவிப்பு
  • புகையிலை பொருட்களுக்கான உற்பத்தி வரி 22% அதிகரிக்கப்படுகிறது
  • தொலைக்காட்சி, ஆன்லைன் விளம்பரங்களுக்கு சேவை வரி விதிப்பு. 
  • அச்சு விளம்பரங்களுக்கு சேவை வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது
  • பயோ - மெடிக்கல் கழிவு அகற்றும் பணிக்கு சேவை வரியில் விலக்கு. 

மாநில தேர்தல் சிறப்பு மாநாடு

அன்பு தோழர்களே
        வணக்கம் நமது தமிழ் மாநில தேர்தல் சிறப்பு மாநாடு கோவில்பட்டி நகர் L.G.செல்வமஹாலில்  10.07.2014 அன்று வியாழன் காலையில்  சரியாக 1௦3௦ மணிக்கு கிருஷ்ணகிரி கோட்டசெயலாளர் இடைக்கால குழுவின் உறுப்பினர் திரு.K.மோகன்ராவ், அவர்கள்  தலைமையில் மிக கோலாகலமாக தொடங்கியது
         மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக இறைவணக்கம் பாடப்பட்டது.
அதனை தொடர்ந்து இடைக்கால குழுவின் தலைவர் திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் 
          மாநாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சார்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து  
அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.D.கிஷன் ராவ் அவர்கள்  தற்போதைய நிலையில் இலாகா சந்திக்கும் பிரச்சனைகள் 7 வது ஊதியகுழுவில் நமது கோரிக்கைகள் அதனை பற்றிய நிலை போன்றவற்றை விளக்கினார். அதனை தொடர்ந்து கர்நாடக மாநில செயலரும் நமது அகில இந்திய உதவி செயலருமான திரு B . ஷிவ்குமார் அவர்கள்.
முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு. P.S. பாபு  அவர்கள் முன்னாள் ACS Tamilnadu Circle திரு.N.R. கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

      இடைக்கால குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோவில்பட்டி கோட்ட நிர்வாகிகளுடன் இணைந்து மாநாடு ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தனர்.

Wednesday 9 July 2014

Rail Budget: Private sector, foreign investors get ticket to ride on Modi's bullet train

Railway minister Sadananda Gowda used his budget on Tuesday — the first major policy showcasing of the Modi government — to signal its intention of using private sector investments, both domestic and foreign, as the prime engine of growth and modernization. Having got rid of the difficult part by hiking rail fares and freight charges late last month, Gowda could focus his budget speech on the new government's vision for the Railways, and he did just that.

READ ALSO : Modi sheds populism baggage from rail budget

The government's vision clearly has a major role for the private sector in everything from new projects and freight terminals to cleanliness and food on trains and at stations. As Gowda's speech made clear, "It is our target that bulk of our future projects will be financed through PPP (public-private partnership) route".

He argued that while hikes in fares and freight charges were necessary to sustain financial viability, it would be "unrealistic" to depend solely on such an approach to raise the resources needed for modernizing the prime national transporter. That's why, the minister said, his ministry was seeking Cabinet approval for allowing FDI in the sector.

READ ALSO : Govt to allow FDI in suburban rail corridors, stations

Gowda was at pains to point out that successive governments in the past had announced new projects with abandon — falling prey to the "nasha (intoxication) of claps — but had been lax in implementing them to the extent that some were pending for three decades. In contrast, he said, the focus now would be on prioritizing projects. In particular, doubling and trebling of lines to decongest major routes would get the nod ahead of new lines, which have typically been unviable.
In keeping with this line of shunning populism and in a radical departure from historical practice, the minister did not announce any new projects in his budget, though there were a slew of new trains (including those announced by the UPA in the interim rail budget) and extensions of existing ones. Gowda also castigated earlier governments for failing to raise passenger fares and thus creating a situation in which the loss per passenger kilometre had risen from 10 paise in 2000-01 to 23 paise in 2012-13.

READ ALSO: Railway finances hang by 6-paise thread

Describing the noughties as the "decade of golden dilemma - the dilemma of choosing between commercial viability and social viability", Gowda said while the Railways would continue to fufil social obligations, doing so beyond a point was "not possible without compromising on efficiency and safety".

Despite the pro-corporate and pro-reform tone of the rail budget, stock markets reacted adversely with the sensex shedding 518 points, its biggest single-day decline in 10 months. The slump was attributed by market analysts partly to the absence of details in the budget speech. Also, while corporates and markets are looking forward to greater fiscal discipline, there's a worry that a stricter watch on government spending could lower demand and hence hit growth.

READ ALSO: Sensex tanks 518 points on spending cut fears

The political opposition as well as the railway unions, not surprisingly, reacted sharply to the budget, with some dubbing it 'elitist' and others decrying the move to 'privatize' the railways.

The new-look railways, Gowda promised, would include a bullet train between Mumbai and Ahmedabad, high-speed trains on nine sectors, a greater focus on cleanliness and decent food and further improvements in the e-ticketing system. They would also see some stations being developed along the lines of the new airports through the PPP route.

READ ALSO: High-speed trains, push for new routes cheer Mumbai

Corporates will not just have a role to play in developing new freight terminals, they could also adopt stations and take care of their cleanliness and maintenance. NGOs and charitable institutions too could do so. CCTVs will be used to monitor cleanliness at stations.

Food courts at major stations, where regional cuisines would be available, and pre-cooked meals on board from reputed brands are among the promises on the catering front.

READ ALSO: Taste of India put on the fast track

Not only will tickets be available for booking online, the facility would also be extended to booking trains, coaches, or seats. Online booking of retiring rooms will be extended to all stations in 2014-15, the minister promised.

Business travellers will also, on some select trains, be able to use workstations for a fee. For the handicapped and elderly, the service of battery-operated carts will be extended to cover all major stations. Safety of women too found a mention, with the rail mantri saying 4,000 women RPF constables would be recruited towards this end. Also, "coaches for ladies will be escorted" and additional care would be taken of women travelling alone.


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms