Friday 16 December 2011

மார்கழி மகிமை


 ஸ்ரீ  ஆண்டாள்

மாதங்களில் நான் மார்கழி யாக  இருக்கிறேன் என்பது கண்ணபிரானின் அருள்வாக்கு 
 ஸ்ரீ  ஆண்டாள்
                  
                   நம் முன்னோர்கள் முழு ஆண்டையும் ஆறு பருவங்களாக பிரித்தனர்  அவை கார்          கூதிர்       முன்பனி          பின் பனி இளவேனில்         முதுவேனில்   என வகுத்தனர் 

அவற்றில்  கார்த்திகை - மார்கழி கூதிர் பருவம் ஆகும்  கூதிர் என்பது குளிர் அதிகமான காலமாகும் இக்காலத்தில் உடல் வெப்பம் தனிய விடியற் களத்தில் குளிப்பது உடல் நலத்திற்கு பயன் அளிக்கும்
உடல் குளிர்ச்சியுடன் உள்ளமும் குளிர இறைவழிபாடு மிக்க அவசியம் .
            
                 வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு. தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை.
                அப்படி பட்ட பெருமைக்குரிய திருப்பாவை நோன்பு இன்று (December 17) முதல் கடைபிடிக்க படுகிறது. அந்நோன்பை நாமும் கடைபிடித்து பெருமாளின் பேரன்புக்கு பதிரமவோமாக.

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும் 


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms