Sunday 8 January 2012

மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள்

                          தொடர்ந்து நடந்த Subject  Committee விவாதத்திற்கு பிறகு மாநில செயலாளர் திரு முத்துகிருஷ்ணன் அவர்கள் பதிலுரை அளித்தார்கள்.
அப்போது இயக்கம் வளர கோட்ட செயலாளர்கள் செய்ய வேண்டிய பணிகளை விவரித்தார்கள். FNPO சங்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியையும் தலைவர் KR அவர்களின் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார்கள். தனது இரண்டு ஆண்டு கால இயக்க பணிகளையும் நினைவு கூர்ந்தார். தனது பணிகாலத்தில் செய்த பணியினை பாராட்டிய  பல்வேறு கோட்ட செயலாளர்களுக்கு  நன்றியை தெரிவித்தார்கள்.
குறிப்பாக March 8 ல் பெண் ஊழியர்களுக்காக CCL கிடைக்கும் வரை தூத்துக்குடியில் உன்னாநோன்பு இருக்க முயன்றதையும் அதற்கு முன்பாக CCL வழங்கிய தூத்துக்குடி SSPO அவர்களையும்  அதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பெண் ஊழியர்களுக்கு CCL கிடைத்ததையும் அது முற்றிலும் தேசிய சங்கத்தின் வெற்றி என பிரகடனபடுத்தினார்.இவ்வாறாக தனது சுமார் 2 மணி 15 நிமிடங்களுக்கு தனது நீண்ட பதிளுரையை தந்தார்.
அதனை தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அவை தொடர்ந்தது.

மாநில மாநாடு பல்வேறு தீர்மானங்களை ஏற்றியது . பின்னர் மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது .
 தலைவராக திரு இராம சந்திரன் அவர்களும்
திரு முத்துகிருஷ்ணன் அவர்கள் மாநில செயலாளராகவும் ஒரு மனதாக தேர்தேடுக்கபட்டனர். மாநில நிர்வாகிகள் பட்டியல் Circle Union என்ற தலைப்பில் காணலாம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms