Wednesday 7 November 2012

முப்பெரும் விழா

                      இது மாநில கவுன்சில் கூட்டமா?  இல்லை மாநில மாநாடா ?
என வந்திருந்தோர் வியக்க, நம்  தலைவர்கள் வாழ்த்தவெற்றிகரமாக  நடந்தேறியது நம் முப்பெரும் விழா

அன்புடையீர்    
              கடந்த இரு தினங்களாக  04.11.2012 அன்று மாநில செயற்குழுவும் தொடர்ந்து 05.11.2012 அன்று மாநில கவுன்சில் கூட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியரின் கருத்தரங்கம் என முப்பெரும் விழா வெகு விமர்சையாக திருநெல்வேலியில் நடந்தேறியது.

 04.11.2012
               காலை மணி 10 க்கு இறைவணக்கத்துடன் தொடங்கியது  மாநில உதவி தலைவர் திரு விநாயகம் அவர்கள் தலைமையில்  திருநெல்வேலி கோட்ட செயலாளரும் வரவேற்ப்பு குழு செயலாளருமான திரு S.A. இராம சுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த நமது மாநில செயலாளர் திரு.G.P.முத்து கிருஷ்ணன் அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார் . தொடர்ந்து விவாதங்களுடன் கூட்டம் தொடர்ந்தது. மதியம் உணவு இடைவேளைக்காக மட்டும் 30 நிமிட இடைவெளியில் தொடர்ந்து இரவு மணி 1030 வரை இடைவிடாது நடந்தேறியது.
05.11.2012


திரு.K.M.A. நிஸாம் அவர்கள்
திரு ஆதிசிவஞானம் அவர்கள்
திரு.V.K.P. சங்கர்  அவர்கள்
காலை மணி 10 க்கு இறைவணக்கத்துடன் மாநில கவுன்சில் கூட்டம்  தொடங்கியது.
தொழிலதிபர்கள் திரு.K.M.A. நிஸாம் அவர்களும்

திரு ஆதிசிவஞானம் அவர்களும்

 திரு.V.K.P. சங்கர் அவர்களும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர்.
நமது மாநில உதவி தலைவர் திரு விநாயகம் அவர்கள் தலைமையில்
திருநெல்வேலி கோட்ட செயலாளரும்
 வரவேற்பு குழு செயலாளருமான
திரு.S.A. இராம சுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை  நிகழ்த்த



நமது மாநில செயலாளர்  
திரு.G.P.முத்து கிருஷ்ணன்அவர்கள்
ஆண்டறிக்கை சமர்ப்பித்தார் தொடர்ந்து
 நமது சம்மேளன பொது செயலாளர்  
 திரு D. தியாகராஜன் அவர்கள் சிறப்புரை   
 ஆற்றினார் 
பிறகு பல்வேறு கோட்ட கிளை செயலாளர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு நடைபெற்றது. இக்கூட்டமும் மதியம் உணவு இடைவேளைக்காக மட்டும் 30 நிமிட இடைவெளியில் தொடர்ந்து மாலை மணி 0500க்கு நமது மாநில செயலாளரின் பதிலுரையுடன் நிறைவுற்றது.  











வரலாற்று சிறப்புமிக்க கிராமிய அஞ்சல் ஊழியருக்கான தென்மண்டல கருத்தரங்கம்
மாலை  0520 மணிக்கு நடைபெற்றது.
இதில்  நமது சம்மேளன பொது செயலாளர்
திரு D. தியாகராஜன் அவர்களும்
திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர்  
திரு S.S. இராமசுப்பு M.P., அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நமது தென்மண்டல செயலாளர் திரு பாஸ்கரன் அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.

கூட்டத்தின் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் விரைவில் UPLOAD செய்யப்படும் 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms