Monday 29 April 2013

முதல் வெற்றி. இனி தொடரும் நம் வெற்றி

பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நெல்லை மாவட்ட அஞ்சல் ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழுவிற்கு கிடைத்த முதல் வெற்றி.
             ஆம் தோழர்களே நமது JCA வின் முதல் நோக்கம் அரசை எதிர்க்கும் ஊழியர் போராட்டம் வலிமைமிகுந்ததாக இருக்கவேண்டும் என்பதே. 
அந்த போராட்ட களத்தில் நம்மவர்கள் சுணக்கம் காட்டிய போது நம்மிடையே ஏற்பட்ட மனக்குறையே JCA புது பொலிவு பெறவேண்டிய அவசியத்தை கொடுத்தது. 
அதன் விளைவு ஊழியர் போராட்டம் வலிமைமிகுந்ததாக கட்டமைக்க படவில்லை எனில் தொழிலாளர்கள் நம்மை விட்டு விலகிசெல்ல நேரிடும் என உணர்த்து சிலர்  மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று 7 வது ஊதிய குழு அமைக்க வேண்டியும், புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்று அவர்களும் நம்மைப்போல ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதுவும் சிரமேற்கொண்டு செயல்பட்டனர் என்ற செய்தி நமக்கெல்லாம் சந்தோசமே. இதை தான் நாம் எதிர்பார்த்தோம் தோழர்களே நமது முதல் நோக்கம் நிறைவேறியது மட்டுமல்ல 
இதுவே நமது  முதல் வெற்றி !
இனி தொடரும் நம்(ஊழியர்)  வெற்றி !

குறிப்பு : நமது பெருந்திரள் ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகள் விரைவில்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms