Monday 7 November 2016

31 வது தூத்துக்குடி கோட்ட மாநாடு

       31 வது தூத்துக்குடி கோட்ட மாநாடு தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் வைத்து (06.11.2016) நடைபெற்றது.  

       மாநாட்டிற்கு கோட்டதலைவரும் மாநில இடைக்கால குழு தலைவருமான திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள் தலைமை தாங்கினர். மாநாட்டில் கோட்ட செயலாளர் திரு.N.J.உதய குமாரன்அவர்கள் ஈரண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் திரு ஜான்பால்அவர்கள் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார். 

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அகில இந்திய செயலாளர் திரு.P.S.பாபு அவர்கள்,  கலங்கரை விளக்கு ஆசிரியர் ஜனாப் மாலிக் அவர்கள் மற்றும் பல்வேறு கோட்ட/கிளை செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். குறிப்பாக பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நமது கோட்டத்தின் சார்பாக தலைவர் திரு.S.A.இராம சுப்பிரமணியன் மற்றும் பொருளாளர் திரு.M.ரமேஷ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மாநாட்டில் தலைவராக திரு.P.திருஞான சம்பந்தம்
செயலாளராக திரு.N.J.உதய குமாரன்
பொருளாளராக திருமதி மரகதவல்லி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர். 
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரு ஜான்பால், திரு.சேர்மராஜ், , திரு.ஜோதிவேல் திரு.தனராஜ் மற்றும் P4 -திரு.ஜெய சந்திரன் திரு.ஐயப்ப ராஜேந்திரன் திரு.ஆறுமுக நயினார் திரு.முரளி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் 
 
 




 

2 comments:

Unknown said...

CONGRATULATIONS FNPO TENKASI BRANCH KOVILPATTI DIVISION

Unknown said...

திரு.P.திருஞான சம்பந்தம்
செயலாளராக திரு.N.J.உதய குமாரன்
பொருளாளராக திருமதி மரகதவல்லி CONGRATULATIONS TO NEW OFFICE BEARERS TUTICORIN FNPO

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms