The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 4 May 2013

மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.

            தாம்பரம் கோட்ட தேசிய சங்கத்தின் ஆவடி கிளையின் 30 வது கோட்ட மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
நாள் 05.05.2013                          இடம் : ஆவடி கேம்ப் தலைமை அஞ்சலகம்
சிறப்புரை திரு முத்து கிருஷ்ணன் மாநில செயலாளர் P3

                   திரு குணசேகரன் மாநில செயலாளர் P4
                   திரு கோதண்டராமன் மாநில செயலாளர் GDS

தகவல் : திரு R. இராஜகோபாலன், Postmaster Grade I, கொடுங்கையூர் 

Friday, 3 May 2013

FNPO P3 Monthly subscription raised to Rs.40

       The Department issued orders vide letter No. 15-2/2007-SR dated 16-4-2013 raising the monthly subscription from Rs 30/- to Rs 40/-. Our Central HQ requested all the Divisional Secretaries to take action for recovery of subscription @ of Rs 40/- from the pay of April 2013. 
To download the original orders click here.

Wednesday, 1 May 2013

Rotational Transfer 2013

இந்த ஆண்டிற்க்கான சுழல் மாறுதல் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது
நகலை பார்க்க இங்கே சொடுக்கவும்

May day celebrations

                 

மே தினத்தை முன்னிட்டு நமது தேசிய சங்க கொடியினை இன்று  காலை 8 மணிக்கு அஞ்சல் மூன்று கோட்ட தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி தலைமை அஞ்சலக அதிகாரி திரு கடற்கரையாண்டி அவர்கள் ஏற்றி வைத்தார்.
உடன் திரு இராம சுப்பிரமணியன் திரு காளிதாசன் திரு குணா திரு பாரதி திருமதி சுப்பு லக்ஷ்மி திரு ரமேஷ்  திரு தங்கபாண்டியன் மற்றும்  திரு மாரிகண்ணு                                                           

JCA Leaders met with SPOs

            அஞ்சல் & RMS ஊழியர் கூட்டு நடவடிக்கை குழுவின் ( JCA ) சார்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு சாந்தகுமார் அவர்களை 30.04.2013 அன்று மாலை JCA Convener திரு இராம சுப்பிரமணியன் மற்றும் NFPE Asst Circle Secretary திரு தியாகராஜன் ஆகியோர் தலைமையில் JCA தலைவர் திரு காசி விசுவநாதன், 
FNPO P4 திரு காளிதாசன், 
Ambai NFPE P4 திரு சுப்பிரமணியன், 
FNPO P3 தலைவர் திரு ஆனந்தராஜ்  ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
            V.K..புரம் திருநெல்வேலி நகர் அஞ்சலகங்களில் இருந்து தபால்காரர் Re-Deployment பற்றி விவாதித்தனர். மேலும் KTC Nagar அஞ்சலகத்தை Delivery SO ஆக மாற்றினால் ஏற்படும் நன்மைகளை நமது பிரதிநிதிகள் எடுத்து கூறினார்.  நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு சாந்தகுமார்அவர்கள் பரிவுடன் கோரிக்கைகளை பரிசிலிக்க தயாராக இருப்பதாகவும் தனக்கு,அதாவது கோட்ட நிர்வாகத்துக்கு உள்ள பிரச்சனைகளையும் விளக்கினார்கள். மண்டல நிர்வாகத்துடன் பேசி முடிக்க முயற்சி செய்வதாக கூறினார்கள். 
நமது JCA மண்டல அளவில் இப்பிரச்சனையை கொண்டு சென்று தீர்வு காண தொடர்ந்து முயலும் என தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி சொல்லும் நேரம்

               Membership forms submitted yesterday on 30.4.2013. We thank all who have joined their hands with us and shown their faith in our Association.Totally 30 members have joined in our Union. We also thank our members who have shown their support in all ways to increase our strength. We would like to ensure them that we will fulfill their expectations with our best level. 

Tuesday, 30 April 2013

May Day Wishes

உழைக்கும் வர்க்கத்தின் உரிமை திருநாள் -    மே தின நல்வாழ்த்துக்கள் 

  
அன்பு தோழர்களே !
                    மே தினத்தை முன்னிட்டு நமது தேசிய சங்க கொடியினை ஏற்றிட மே 1 அன்று காலை 8 மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்திற்கு அனைவரும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
சங்க கொடியினை ஏற்றி வைப்பவர் : திரு ஆனந்தராஜ் அவர்கள் 
                                                               கோட்ட தலைவர் அஞ்சல் மூன்று 

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

               மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று 7 வது ஊதிய குழு அமைக்க வேண்டியும்  புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற கோரியும் நேற்று 29.04.2013 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு மாலை 0530 மணிக்கு நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
             ஆர்ப்பாட்டத்தை தெட்சன ரயில்வே ஊழியர் சங்க கிளை செயலாளர் திரு ராஜு அவர்கள் தலைமை ஏற்று நடத்திவைதர்கள்
 FNPO P3 தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் , AIPEU P3 திரு சண்முக சுந்தர ராஜா அவர்கள், FNPO P4 செயலாளர் திரு காளிதாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் NFPE Circle Asst Secretary 
திரு S.T. தியாகராஜன் அவர்களும் 
FNPO Divisional Secretary திரு இராம சுப்பிரமணியன்  அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் BSNL NFTE திரு பாபநாசம் R3 திரு பழனி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தோழர் பார்த்தசாரதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்

ஆர்ப்பாட்டத்தில் எங்கள் அழைப்பை ஏற்று கலந்துகொண்ட அனைவருக்கும்  எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இச் செய்திகளை வெளியிட்ட நாளிதழ்கள் தினத்தந்தி தினமணி தினகரன் மற்றும் The New Indian Express பத்திரிக்கைகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
போராட்ட வாழ்த்துக்களுடன்
E. காசி விசுவநாதன்  President    NFPE GDS                
S.A. இராம சுப்பிரமணியன்   Convener  FNPO P3    
S.இராமசாமி     Tresurer NFPE PSD P3                     

Monday, 29 April 2013

முதல் வெற்றி. இனி தொடரும் நம் வெற்றி

பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நெல்லை மாவட்ட அஞ்சல் ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழுவிற்கு கிடைத்த முதல் வெற்றி.
             ஆம் தோழர்களே நமது JCA வின் முதல் நோக்கம் அரசை எதிர்க்கும் ஊழியர் போராட்டம் வலிமைமிகுந்ததாக இருக்கவேண்டும் என்பதே. 
அந்த போராட்ட களத்தில் நம்மவர்கள் சுணக்கம் காட்டிய போது நம்மிடையே ஏற்பட்ட மனக்குறையே JCA புது பொலிவு பெறவேண்டிய அவசியத்தை கொடுத்தது. 
அதன் விளைவு ஊழியர் போராட்டம் வலிமைமிகுந்ததாக கட்டமைக்க படவில்லை எனில் தொழிலாளர்கள் நம்மை விட்டு விலகிசெல்ல நேரிடும் என உணர்த்து சிலர்  மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று 7 வது ஊதிய குழு அமைக்க வேண்டியும், புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்று அவர்களும் நம்மைப்போல ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதுவும் சிரமேற்கொண்டு செயல்பட்டனர் என்ற செய்தி நமக்கெல்லாம் சந்தோசமே. இதை தான் நாம் எதிர்பார்த்தோம் தோழர்களே நமது முதல் நோக்கம் நிறைவேறியது மட்டுமல்ல 
இதுவே நமது  முதல் வெற்றி !
இனி தொடரும் நம்(ஊழியர்)  வெற்றி !

குறிப்பு : நமது பெருந்திரள் ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகள் விரைவில்.

மதுரை புதிய நிர்வாகிகளுக்கு நல் வாழ்த்துக்கள்

              28.04.2013 அன்று மதுரை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற 29 வது மதுரை கோட்ட மாநாட்டில் தலைவராக திரு P. பெருமாள் அவர்களும் செயலாளராக திரு.K.V. ராஜன்  அவர்களும்
பொருளாளராக திரு அசோக்குமார் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர், அவர்களுக்கு திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
மாநாட்டில் மாநில செயலாளர் திரு G.P. முத்து கிருஷ்ணன் அவர்களும்
முன்னாள்  முன்னாள் மாநில உதவி செயலாளர் திரு பாண்டியன் அவர்களும்
முன்னாள் கோட்ட செயலாளர் திரு அய்யலு அவர்களும்
முன்னாள் மண்டல செயலாளர் திரு முத்துசாமி அவர்களும்
மண்டல செயலாளர் திரு G.பாஸ்கரன் அவர்களும்
மாநில உதவி செயலாளர் திரு N.J.உதயகுமரன் அவர்களும்


திருநெல்வேலி கோட்டசெயலாளர் திரு S.A. இராமசுப்பிரமணியன் அவர்களும்  கோவில்பட்டி கோட்ட செயலாளர் திரு சமுத்திர பாண்டியன் அவர்களும்
இராமநாதபுரம் கோட்ட செயலாளர் திரு முகமது இஸாதீன் அவர்களும்
தேனீ கோட்ட செயலாளர் திரு முத்தையா அவர்களும்
விருதுநகர் கோட்ட செயலாளர் திரு சேவுக பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்தது தென்மண்டல கோட்ட செயலர்களின் கூட்டம் நடைபெற்றது.

Saturday, 27 April 2013

PM Grade I Exam 2013

அன்பு தோழர்களே
                  Postmaster Grade I பதவிக்கு  சுமார் 50 காலிபணியிடங்கள் வரும் 2013,2014ம் ஆண்டுகளில் உருவாகிறது. நினைவில் கொள்க,இன்றே தயாராவீர். 
Directorate has announced the schedule for conducting Limited Departmental Competitive Examination for promotion to the cadre of Postmaster Grade I for the year 2013 vide letter no A-34012/4/2012-DE dated 23.04.2013. The date of Examination is 30.06.2013(Sunday). The last date for receipt of applications from willing officials at their controlling units is 03.05.2013.

29th Divisional Conference of NUPE Group C Madurai Division

29th Divisional Conference of NUPE Group C
Madurai Division, Madurai 625001
Date : 28.04.2013                                                                                    Time : 1000 Hrs
Place : Com.Sigappi Memorial Hall, Madurai HO

பொது அரங்கம் 
தலைமை  : Shri.S.Pandian, Ex Tamilnadu Circle Asst Secretary, அவர்கள் 
முன்னிலை  : Shri.N.Ayyalu, Ex Madurai Divisional Secretary,அவர்கள்
கொடி ஏற்றுபவர்  : Smt.Santha Rani அவர்கள்

உள் அரங்கம் 
தலைமை   : Shri.P.Perumal, President P3 அவர்கள்
வரவேற்புரை : Shri S.Sekar, Asst Secretary, P3 அவர்கள்

சிறப்புரை  :
Shri.G.P.Muthu Krishnan, Circle Secretary, P3 அவர்கள்
Shri.S.Pandian,  Ex Tamilnadu Circle Asst Secretary, அவர்கள் 
Shri.M.Muthusamy, Ex Regional Secretary Madurai. அவர்கள்
Shri.N.Ayyalu,Ex Madurai Divisional Secretary,அவர்கள் 
Shri.G.Baskaran, Regional Secretary, Madurai அவர்கள்
Shri.N.J.Udayakumaran, Asst Circle Secretary, Tamilnadu, Tuticorin அவர்கள்
Shri.S.A.Rama Subramanian, Divisional Secretary, Tirunelveli Division.அவர்கள்
Shri.Kuppusamy Bharathi, Circle Asst Treasurer, Dindugal Division.அவர்கள்
நன்றியுரை : புதிய செயலாளர்
 
மாநாடு சிறக்க திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்  


பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று
7 வது ஊதிய குழு அமைக்க வேண்டியும் 
புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற கோரியும் 
29.04.2013 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு மாலை 0530 மணிக்கு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.



NFPE                                                         JCA                                                       FNPO

நெல்லை மாவட்ட அஞ்சல் ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு சார்ப்பாக பெருந் திரள் ஆர்ப்பாட்டம் 

மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று
7 வது ஊதிய குழு அமைக்க வேண்டியும் 
புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற கோரியும் 
29.04.2013 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு மாலை 0530 மணிக்கு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வெற்றி யடையச் செய்திடுவீர்.
போராட்ட வாழ்த்துக்களுடன்
E. காசி விசுவநாதன்  President    NFPE GDS                
S.A. இராம சுப்பிரமணியன்   Convener  FNPO P3    
S.இராமசாமி     Tresurer NFPE PSD P3                     

Friday, 26 April 2013

Jan-2013 DA Order issued by finmin

The additional dearness allowance @ 8% from 1st January 2013 for Central Government Employees was  approved by cabinet. The Finance ministry has issued order to grant additional DA from July, 2012 vide his No. 1(2)/2013-E-II(B) dated 25th April, 2013.  Text of said OM are reproduced below:



Southern Region Divisional Secretaries Meet at Madurai

                   The Southern region Divisional and Branch secretaries meeting will be held on 28th April 2013 Sunday 1530 Hrs at Madurai HPO. Our Circle Secretary Shri.G.P. Muthu Krishnan will attend in this meeting. All DS/BS are requested to attend in this meeting without fail.
                 - G.Baskaran, Regional Secretary, Madurai

Thursday, 25 April 2013

Notification for MTS Examination 2012 to be held on 26/05/2013

Last date for receipt of applications at SAAs              29.04.2013
Last date for receipt of applications at DO                 30.04.2013
Date of Examinations                                              26.05.2013

for full details click here

No merger of D.A. but seventh pay commission likely this year

               According to our sources in New Delhi, there is no chance of any merger of Dearness Allowance with basic pay as demanded by the associations. But the Government is considering the formation of seventh pay commission. The seventh CPC is scheduled to be effective from 1.1.2016 and if it is formed this year, there will be ample time to finalize it's recommendations. Moreover, if it is not effective from an earlier date, the Govt. will be free from any burden of paying arrears, which may adversely effect the fiscal situation. Most significantly, in the eve of general election, the Govt. may spread a "feel good" situation among the employees without having to pay an extra penny from the exchequer. In the other hand merging D.A. with basic pay will lead to a considerable expense and as there is definite negative recommendation of sixth CPC in this respect, Govt. can easily deny this demand. After formation of seventh CPC, if the ruling party fails to come back in the corridors of power, the entire liability will have to be borne by the new Govt. So, it's a win win situation of the ruling party and most likely, it will be announced in the later half of the year.

Source : http://paycommissionupdate.blogspot.in/

Tuesday, 23 April 2013

Way to solve the Problems


Saturday, 20 April 2013

சொல்ல மறந்த கதைதான்.

தம்பிக்கு என ஆரம்பித்த அண்ணனுக்கு.............

சொல்ல மறந்த கதைதான் நாங்களும் சொல்ல விரும்பினால்  ?
வேண்டாம் உங்களை போல மாற நாங்களும் விரும்பவில்லை.


கூட்டு நடவடிக்கை குழு Notice க்கு பதில் சொல்ல விரும்பிய அண்ணா.......
எதற்கு எடுத்தாலும் "தான்" "தான்"  என்ற எண்ணம் கொண்ட தாங்கள் கூட்டு நடவடிக்கை குழு Notice க்கு தனி நபரை (தம்பியை) குற்றம் சுமத்துவதில் வியப்பில்லை. இருந்தபோதிலும் கூட்டு நடவடிக்கை குழு அமைப்பாளர் என்ற முறையில் பதில் சொல்ல விரும்புகிறேன்.
மூன்றாவது முறையாக FNPO சங்கம்  உங்கள் செயல்பாடுகளை  விமர்சனம் செய்வதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.  
விமர்சனத்தை எதிர்கொண்டு தானும் மாறிகொள்வது தான் சிறப்பு.
இல்லையேல் பதில் சொல்ல வேண்டும்  இத்தனை நாள் பதில் சொல்ல மறந்தது ஏன் ? இன்றாவது மவுனம் கலைந்ததற்கு சந்தோசமே.
 FNPO  பங்கு பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்  நாங்கள் எந்த இடத்திலும் தவறான ஒன்றை சொல்லவில்லை  பெரிய சங்கம் போராட்டத்தை குலைக்கும்  போது என்ன நடக்கும் என நான் சொல்லி தாங்கள் தெரியவேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை. 
12.12.2012  வேலை நிறுத்தத்தை முறியடிக்க NFPE க்கு எதிராக  நாங்கள் செய்த உள்ளடிகள்  உங்களால்  கூற முடியுமா ? என்றைக்கும் தொழிலாளர் மற்றும் தொழிசங்க நலன்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டதில்லை. அதே சமயம் 
FNPO பங்குபெறாத போது பாளை FNPO தோழர் வேலை செய்ய அனுமதித்தல் எப்படி குற்றமாகும் ? சிந்திப்பீர்.
R 4 குறித்து சரியான தகவல்கள்  மட்டுமே கொடுக்கபட்டுள்ளது. பொய்சொல்லி அரசியல் பொழப்பு நடத்தவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அத்தனைக்கும் மேலாக மனசாட்சி இருக்குமானால் சிந்திப்பீர்.
பல்வேறு JCA போராட்டங்களில் தங்களோடு கைகோர்த்து வந்ததை  மறைக்கலாமா ?   இல்லை மறுக்கமுடியுமா ?
ஆனால் இன்று FNPO ஏன் இந்த நிலை எடுத்தது என்பதையும், தங்களின் Double Stand ஐ முடிந்தால் எண்ணி பாருங்கள்........   
கடந்த 20,21 போராட்டத்தின் போது  10 தினகளுக்கு முன்பாக போராடுவதில்லை என முடிவெடுத்துவிட்டு இரு தினங்களுக்கு முன்பாக JCA சார்பாக Notice போடுவதற்கு FNPO ஒப்புதல் கேட்டது ஏன் ? பிறகு அனைத்து NFPE Member களையும் கூப்பிட்டு வேலை செய்ய சொன்னது ஏன் ? 
JCA ஏன் தங்களின் மத்திய மாநில தலைமைகளையும் மதிக்க தெரியாத நீங்கள் எங்களுக்கு சொல்ல முனையும் கதை தான் என்ன ? 
கதை சொல்லி இதுவரை ஏமாற்றியது போதும். உண்மை சற்று  கசக்கத்தான் செய்யும். மேலும் முறையாக அனைத்து சங்கங்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தும் JCA கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்தது ஏன்? உங்கள் நிலைப்பாட்டை அங்கே விளக்க வேண்டியது தானே? பெரும்பான்மை முடிவுக்கு கட்டுபடுவதை விட்டு விட்டு விதண்டா வாதம் செய்வது ஏன்?   
நீங்கள் எண்ணிக்கையில் பெரியவர்களாக இருக்கலாம் ? 
ஆனால் எண்ணத்தில் இல்லையே என்பதே எங்கள் வேதனை.
குழப்பவாதிகளை கொஞ்சம்  தள்ளி  வைத்தே  பார்போம் . ஆம் தொழிலாளர் பிரச்சனைக்கும் தொழிற்சங்க குழு மனப்பான்மைக்கும் வித்தியாசம் தெரியாத குழப்பவதிகளை சற்றே தள்ளிவைப்போம்.
பல்வேறுபட்டவர்களின் சிந்தனைகளை பிரசுரிப்பதோடு விட்டு விடாமல் சற்று உள்வாங்கி கொள்ள முயற்சியுங்கள்
இன்னும் காலம் கெட்டு போயிடவில்லை 
வாருங்கள் இணைந்த கரங்களாய் போராடுவோம்
நம் போராட்டம் அதிகார வர்க்கத்திற்கும்  அடக்குமுறைக்கும் எதிராக தானே தவிர நமக்குள் இல்லை.மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்கட்டும். 

வேதனையோடு நாங்கள் சொன்னதை மீண்டும் இதோ கீழே தருகிறோம் மீண்டும் படித்து பாருங்கள் 

Friday, 19 April 2013

POSTAL JCA DEMAND REALISED

Filling up the vacancies in Higher Selection Grade- (HSG.I) in post Offices (POs) and Raitway Mail Service (RMS) Offices_Reg.
Click here to see the order.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms